என் கண்முன்னே ஒரு
ஒரு கொலை செய்யுங்கள்
நீங்கள் கருணையற்றுப் புணர்ந்த
ஒருவல்லுறவுக்கு நான்தான் சாட்சி
நீங்கள் அடித்த கொள்ளைக்கும்
கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதென்று
நீங்கள் செய்த காரியங்களுக்கும்
நான்தான் ஆதாரம்
இன்னும் இன்னும்
நீங்கள் செய்த
சட்டத்திற்கு புறம்பான
சட்டத்திற்கு ஆகாத
செயல்கள் அனைத்திற்கும்
நான்தான் ஒரே சாட்சி
பயப்படாதீர்கள்
எப்பொழுதும் போலிருங்கள்
ஒன்றும் பிரச்னை இல்லை
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்
நான் எங்கேயும் போக போவதில்லை
இன்று
மனு நீதிச் சோழனின்
தேர்ச்சக்கரங்கள்
கன்றையும் கொன்றுவிட்டு
ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டிருந்த
பசுவையும், அசுர பசியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது
பசுவையும், அசுர பசியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது
எனக்குத் தெரியும்