சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Monday, August 29, 2016

ஏசுநாதர் ஏன் வரவில்லை?

லை காது மூக்கு கை மார்பு விரல்
தாள் என்ற எட்டுறுப்பும்
தங்க நகை வெள்ளை நகை ரத்தினமிளைத்த நகை
தையலர்கள் அணியாமலும்
விலை குறைந்த ஆடைகள் அணிந்துமே கோயில் வர
வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஒரு சேதியால் விசமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள் புருஷர்
நிலை கண்ட பாதிரி பின் எட்டு உறுப்பே அன்றி
நீள் இமைகள் உதடு நாக்கு
நிறைய நகை போடலாம் கோயிலில் முகம் பார்க்க
நிலைக்கண்ணாடியும் உண்டென
இலைபோட்டு அழைத்ததும் நகை போட்ட பக்தர்கள்
எல்லோரும் வந்து சேர்ந்தார்
ஏசு நாதர் மட்டும் அங்கு வரவில்லையே
இனிய பாரத தேசமே
                         -பாரதிதாசன்