சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Monday, August 29, 2016

பாலபாரதி கவிதைகள்

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்
இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்
கைக்குழந்தையின் 
கால் கொழுசை தடவிய படி 

குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய் குடங்களோடு அலைந்தோம்
எங்கள் துயரம் தீர்க்க
எம் எல் ஏ தேடினோம் தொலைபேசியில்
எப்பொழுது கேட்டாலும் கிடைத்த பதில்
தூங்குகிறார்
குளித்து கொண்டிருக்கிறார்
ற்புக்கரசி 
கண்ணகி சீதை
நளாயினி பெயரெல்லாம்
நினைவுக்கு வருகிறது
கற்றுகொடுத்த
தமிழாசிரியை பெயர்தான்
மறந்து விட்டது

-பாலபாரதி