பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்
இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்
கைக்குழந்தையின்
கால் கொழுசை தடவிய படி
குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய் குடங்களோடு அலைந்தோம்
எங்கள் துயரம் தீர்க்க
எம் எல் ஏ தேடினோம் தொலைபேசியில்
எப்பொழுது கேட்டாலும் கிடைத்த பதில்
தூங்குகிறார்
கண்ணகி சீதை
நளாயினி பெயரெல்லாம்நினைவுக்கு வருகிறது
கற்றுகொடுத்த
தமிழாசிரியை பெயர்தான்
மறந்து விட்டது
-பாலபாரதி