சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Monday, August 29, 2016

கல்யாண்ஜி கவிதைகள்

முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை


ல்லாம் அடையும் தூரத்தில்
இடையில் தடையாய்
சில எச்சில் பருக்கைகள் 



ருந்து என்ன ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம் 


இடப்பெயர்ச்சி 
ருப்பு வளையல் கையுடன்
குனித்து வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு 


  கோடை 
நாணல் முளைத்து
தண்ணீர் கரை நனைத்து
நதியெல்லாம் மணல் பாய
குளித்து கரையேறும்
கல் மலர்கள்